கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்ச்சி

கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படையினரின் பங்கேற்புடன் இரத்த தான வழங்கும் நிகழ்ச்சியொன்று 2021 டிசம்பர் 30 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தில் இடம்பெற்றது.

31 Dec 2021

தென்கிழக்கு கடற்படை கட்டளையில் பூப்பந்து பயிற்சி போட்டி தொடரொன்று நடைபெற்றது

தென்கிழக்கு கடற்படை கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூப்பந்து பயிற்சி நிகழ்ச்சி மற்றும் போட்டி தொடரொன்று 2021 டிசம்பர் மாதம் 28 முதல் 30 ஆம் திகதி வரை தென்கிழக்கு கடற்படை கட்டளை பூப்பந்து மைதான வளாகத்தில் நடைபெற்றது.

31 Dec 2021

நான்கு கடற்படை வீரர்களுக்கு சர்வதேச கடல்சார் நிறுவனத்தினால் அங்கீகாரமளிப்பு

நான்கு கடற்படை வீரர்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான கடலில் சாகசம் மிகுந்த துணிச்சலுக்கான ஐஎம்ஓ விருது (2021- IMO Award for Exceptional Bravery at Sea) வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. கடற்படை வீரர்களின் துணிச்சலைக் கருத்தில் கொண்டு சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ (International Maritime Organization – IMO) வினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

30 Dec 2021

கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்ச்சி

கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்குபற்றுதலுடன் திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் இரத்தம் வழங்கும் நிகழ்ச்சியொன்று அண்மையில் இடம்பெற்றது.

29 Dec 2021

வட மத்திய கடற்படை கட்டளையின் இரத்த தானம் நிகழ்ச்சி

வட மத்திய கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த மாலுமிகளின் பங்கேற்புடன் இரத்த தான முகாமொன்று 2022 டிசம்பர் 23 ஆம் திகதி பூனாவ மலிமா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

24 Dec 2021

71வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து சமய நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் தேவாலயத்தில் இடம்பெற்றது

2021 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 71 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் சமய நிகழ்ச்சிகளின் இந்து சமய நிகழ்ச்சி இன்று (2021 டிசம்பர் 01) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து தேவாலயத்தில் நடைபெற்றது.

01 Dec 2021

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் மூலம் கடற்படைக்கு பல உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்பட்டது

போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை இலகுவாகக் கண்டறியப் பயன்படுத்தப்படும் 04 கையடக்க பேக்ஸ்கேட்டர் எக்ஸ்ரே இயந்திரங்களை (Portable Backscatter X-ray Machine) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் கையளிக்கும் நிகழ்வு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் திரு. தோர்ஸ்டன் பார்க்ஃப்ரெட் (Thorsten Bargfrede - Deputy Head of Mission, EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் (United Nations Office on Drugs & Crime - UNODC) பிரதிநிதிகளின் தலைமையில் இன்று (2021 நவம்பர் 30) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

30 Nov 2021

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட இரண்டு பாடசாலைகள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹுங்கம, எத்படுவ கனிஷ்ட வித்தியாலயத்தில் மற்றும் சூரியவெவ, வீரியகம மகா வித்தியாலயத்தில் கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட வசதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் பங்கேப்பில் இன்று (2021 நவம்பர் 29) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

29 Nov 2021

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரியில் அழைக்கப்பட்ட விரிவுரையில் கலந்து கொண்டார்

தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க 2021 நவம்பர் 25 அன்று கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (National Defence College – NDC) முதல் தேசிய பாதுகாப்பு பாடநெறியில் முக்கிய உரையை நிகழ்த்தினார்.

26 Nov 2021

கிண்ணியா, குறிஞ்சங்கேணி பாலத்திற்கு அருகில் பாதுகாப்பான பயணிகள் படகு சேவையை கடற்படை ஆரம்பித்துள்ளது

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை களப்பு ஊடாக வழங்குவதற்காக பாதுகாப்பான பயணிகள் படகு சேவையை இலங்கை கடற்படை 2021 நவம்பர் 25 அம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது.

26 Nov 2021