கிழக்கு கடற்படை கட்டளையின் உதவியுடன் திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் நீர் விளையாட்டு போட்டித்தொடறொன்று நடைபெற்றது
நீர் விளையாட்டுக்கான ஆர்வத்தையும் திறனையும் வளர்க்கும் நோக்கில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் அமைந்துள்ள திஸ்ஸ கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நீர் விளையாட்டு போட்டித்தொடறொன்று 2021 ஏப்ரல் 05, அன்று திருகோணமலை துறைமுகத்தில் உள்ள பெப்பர்போட் (Pepperpot) இறங்குதுறைக்கு முன்னால் கடலில் கிழக்கு கடற்படை கட்டளையால் நடத்தப்பட்டது. கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வைய்.என்.ஜெயரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் 4-வது துரித தாக்குதல் படகு படை மற்றும் கடல் அறிவியல் பீடத்தின் கடற்படை தொழில்நுட்ப பாடசாலை இனைந்து இந்த போட்டித்தொடரை ஏற்பாடு செய்தது.
07 Apr 2021
இன்டர் கிளப் மகளிர் முதல் பிரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் சாம்பியன்களாக கடற்படை வெற்றி பெற்றது
இலங்கை கிரிக்கெட் நிருவனம் 2021 ஏப்ரல் 02 அன்று வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்டர் கிளப் மகளிர் முதல் பிரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டு 'விக்கெட் வித்தியாசத்தில் இராணுவ' ஏ 'அணியை தோற்கடித்தது.
03 Apr 2021