நடவடிக்கை செய்தி
ரூ .26 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படையினர் மன்னார் பொலிஸாருடன் இணைந்து இன்று (2021 ஏப்ரல் 18) முலங்காவில், முத்தலம்பிட்டி பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அங்கு 89 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
18 Apr 2021
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற பீடி இலைகள் கடற்படையினரால் கைது

நீர் கொழும்பு, கொச்சிக்கடை கடற்கரை பகுதியில் 2021 ஏப்ரல் 10 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 770 கிலோ கிராம் பீடி இலைகளுடன் (Kendu Leaves) 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
11 Apr 2021
வணிக வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை தொடர்கிறது

வணிக வெடிபொருட்களைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில், கடற்படை கடந்த வாரத்தில் கிழக்கு கடற்படை கட்டளையில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் போது, மீன்பிடி நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட பல வணிக வெடிபொருட்களுடன் 02 சந்தேக நபர்களை கடற்படை கைப்பற்றியது.
09 Apr 2021
சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டிலிருந்து குடியேற முயன்ற 20 நபர்கள் கடற்படையினரால் கைது

சிலாவத்துர, கொண்டச்சிகுடா பகுதியில் 2021 ஏப்ரல் 06 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 20 பேரை கடற்படை கைது செய்தது.
08 Apr 2021
10 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

மன்னார், வன்காலைபாடு கடற்கரை பகுதியில் 2021 மார்ச் 30 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது 33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
01 Apr 2021
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகள் கடற்படை கைப்பற்றியது

கிழக்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளின் கடற்படையினர் கடந்த 02 வாரங்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகளுடன் சுழியோடி உபகரனங்கள் மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
31 Mar 2021
திக்கோவிட்ட துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்தப்பட்டது

திக்கோவிட்ட, மீன்வள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல நாள் மீன்பிடிப் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த 2021 மார்ச் 29 ஆம் திகதி கடற்படை தீயணைப்பு படையணி நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
29 Mar 2021
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் 2021 மார்ச் 24 ஆம் திகதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
25 Mar 2021
71 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் இன்று (2021 மார்ச் 22) மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற டிப்பர் வண்டியுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
22 Mar 2021
சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டிற்கு கடத்தப்பட்ட 2221 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன

கல்பிட்டி மொஹொத்துவாரம் கடற்கரையில் மற்றும் தலைமன்னார் குடுஇருப்பு கடற்கரையில் 2021 மார்ச் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்ட பின்னர் கடற்படை நடவடிக்கைகளினால் கைவிடப்பட்ட 2221 கிலோ மற்றும் 600 கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
21 Mar 2021