மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

தலைமன்னாருக்கு வடக்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 26 ஆம் திகதி இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு இந்திய படகுடன் 08 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர் மீனவ சமூகத்துக்கு ஏற்படுகின்ற தாக்கம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி, வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட 4 வது விரைவு தாக்குதல் படைப்பிரிவுக்கு சொந்தமான விரைவு தாக்குதல் படகொன்று தலைமன்னாருக்கு வடக்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சர்வதேச கடல் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமான bottom trawling முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு மின்பிடி படகுடன் 08 இந்திய மீனவர்களை கைப்பற்றப்பட்டன.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இலங்கையின் கடற்றொழில் வளத்தைப் பாதுகாப்பதுடன், இலங்கையின் கரையோரப் பகுதிகளையும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த ரோந்துப் பணியில் கைப்பற்றப்பட்ட தோகை உட்பட, இதுவரை 2022 பெப்ரவரி மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 59 மீனவர்களுடன் 09 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.