‘கிண்ணியாவில் படகுப்பாதை கவிழ்ந்ததில் காணாமல் போனவர்களை தேடி கடற்படையின் நடவடிக்கை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியுடன் தொடர்புடையது.

இன்று (2021 நவம்பர் 23) காலை 0730 மணியளவில் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சங்கேணி பாலத்திற்கு அருகில் மக்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதுடன் அங்கு காணாமல் போனவர்களை தேடி கடற்படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இன்று பிற்பகல் நிறைவடைந்தது.

அதன்படி, கடற்படையின் விரைவு நடவடிக்கை படகுகள் படையணி, மரைன் படைப்பிரிவு, சிறப்பு படகுகள் படையணி மற்றும் சுழியோடி பிரிவு அடங்கிய நிவாரண குழுக்கள் மேலும் அப்பகுதி மக்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு குழந்தைகள் உட்பட 26 பேரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளனர்.