998 கிலோவுக்கும் அதிகமான வணிக வெடிபொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது

மன்னார் சாந்திபுரம் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் இன்று (2021 நவம்பர் 20) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 998 கிலோ மற்றும் 750 கிராம் எடையுடைய 7,990 வாட்டர் ஜெல் (Water Gel) குச்சிகளுடன் 02 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கடல் வழியாக நடத்தப்படுகின்ற சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதுக்காக கடற்படையால் தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் மற்றும் கடலில் அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா மற்றும் கஜபாவின் விசேட கடற்படை குழுவினர் இன்று (2021 நவம்பர் 20) மன்னார் சாந்திபுரம் கரையோரப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு, சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 998 கிலோ 750 கிராம் எடையுள்ள 7,990 வாட்டர் ஜெல் (Water Gel) குச்சிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வணிக வெடிபொருட்கள் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட பின்னர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் பயன்பாட்டுக்காக அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் சாந்திபுரம் மற்றும் வான்கலே பகுதிகளைச் சேர்ந்த 54 மற்றும் 57 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படை மற்றும் மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.