சட்டவிரோத போதைப்பொருட்கள் கொண்ட ஒருவர் மன்னாரில் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2021 நவம்பர் 09) மன்னார், பேசாலை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்ட போது 757 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தின் கடற்படையினர் மன்னார் பொலிஸாருடன் இணைந்து இன்று (2021 நவம்பர் 09) மன்னார் பேசாலை, சிரிதோப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் பொதி ஒன்றை எடுத்துச் சென்ற நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் 757 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் தெரு மதிப்பு 06 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வைத்திருந்த போதைப்பொருளுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.