வெள்ளத்தில் சிக்கிய 71 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கற்பிட்டி பாலவிய பகுதியில் சிக்கித் தவித்த 71 பேரை கடற்படை நிவாரணக் குழுக்களால் 2021 நவம்பர் 08 இரவு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணத்தினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு, தெற்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களை உள்ளடக்கி களுத்துறை பரகொட, இரத்தினபுரி புதிய நகரம், காலி உடலமத்த, புத்தளம் பாலவிய, வனாத்தவில்லுவ மற்றும் கரபே, குருநாகல் கிரிஉல்ல மற்றும் அனுராதபுரம் ராஜாங்கனை ஆகிய பகுதிகளில் 10 கடற்படை நிவாரணக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி கரம்பே பகுதியில் வெள்ளத்தால் சிக்கித் தவித்த 71 பேரை கடற்படை நிவாரணக் குழுக்களால் 2021 நவம்பர் 08 இரவு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் தொடர்ந்து, கடற்படையினர் இன்றும் (2021 நவம்பர் 09) அப்பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கனமழை பெய்தால் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படைக் கட்டளைகளில் 60 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.