16 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2021 பிப்ரவரி 15 அன்று யாழ்ப்பாணம், உடுத்துரை மற்றும் மன்னார், உப்புக்குளம் பகுதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், 16 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

‍கடலில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை தொடர்ந்து விழிப்புடன் உள்ளது. அதன் படி பிப்ரவரி 15 ம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் யாழ்ப்பாணம் உடுத்துரை கடற்கரையில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, உடுத்துரை கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கன்காணித்தனர். குறித்த படகை சோதனை செய்த பின் அங்கு 02 சந்தேக நபர்கள் டிங்கி படகில் கொண்டு வந்த 05 பொதிகளுடன் கைது செய்யப்பட்டனர். இந்த பொதிகளில் 11 கிலோ மற்றும் 905 கிராம் கேரளா கஞ்சா இருந்தது. 02 சந்தேக நபர்களுடன் டிங்கி படகு மற்றும் கஞ்சா பொதிகள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அதே நாளில் மன்னார், உப்புக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் ஒரு (01) சந்தேக நபரை 04 கிலோகிராம் மற்றும் 460 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்தனர்.

கடற்படை பறிமுதல் செய்த கேரள கஞ்சாவின் வீதி மதிப்பு சுமார் ரூ .55 மில்லியன் என்றாக நம்பப்படுகிறது.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட, இந்த நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்ட பருத்தித்துறை மற்றும் மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அதன்படி, சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவை பளை மற்றும் மன்னார் காவல் நிலையங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.