சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 179 பேர் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது

2021 ஜனவரி 01 முதல் பிப்ரவரி 15 வரை மேற்கு, கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வட-மத்திய மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் இலங்கை கடற்படை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 179 பேர், 42 படகுகள் , ஒரு லாரி மற்றும் ஒரு முச்சக்கர வண்டி, பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்தல், சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்துதல், உரிமம் இல்லாமல் இரவில் மீன்பிடித்தல், சட்டவிரோதமாக சுறா துடுப்புகளை வைத்திருத்தல், சட்டவிரோதமாக மீன்பிடித்தல், சிப்பிகள் மற்றும் கடல் அட்டைகள் வைத்திருத்தல் மற்றும் கடல் ஆமை முட்டைகளை விற்பனைக்கு கொண்டு செல்லல் ஆகிய காரணங்களினால் இந்த நபர்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் 19 முதல் 67 வயதுக்குட்பட்ட மன்னார், பல்லெகுடா, பூனரின், சுன்னாகம், வன்காலை, நச்சிகுடா, போகஸ்வெவ, வெடிதலதீவு, அரிப்பு, உப்புவேலி, சல்லிசாம்பல்தீவு, கல்பிட்டி, நீர்கொழும்பு, கந்தக்குலிய, குடாவ, புத்தலம், நொரொச்சோலை, வென்னப்புவ, வாத்துவ, திக்வெல்ல, கந்தர, இரனவில, ஜா-எல, அலவ்வ, ஹம்பன்தோட்டை மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் குடியிருப்பாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் பிற பொருட்களுடன் திருகோணமலை, மன்னார், பேசாலை, சிலாவத்துர, கல்பிட்டி, புத்தலம், ஹம்பாந்தோட்டை, கிலிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களுக்கும், புறக்கோட்டை மற்றும் திக்வெல்ல காவல் நிலையங்களுக்கும் தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணையத்தின் மீன்வள ஆய்வாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டன.