124 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

கடற்படையால் 2021 ஜனவரி 06 ஆம் திகதி வடக்கு கடற்பரப்பில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 124 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடலில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன் படி காங்கேசந்துரை மைலடி பகுதிக்கு வடக்கு கடற்பரப்பில் வடக்கு கடற்படை கட்டளை நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, தொண்டமநாரு நோக்கி சென்ற சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றில் பயணித்த நபர்கள் கடற்படையின் நடவடிக்கைகளினால் படகில் இருந்த பல பைகள் கடலில் வீசி தப்பிச் செல்ல முயன்றனர். பின்னர் கடற்படை குறித்த படகைத் துரத்திச் சென்று இரண்டு (02) சந்தேக நபர்களையும், டிங்கி படகையையும், கடலில் வீசிய சுமார் 124 கிலோகிராம் மற்றும் 65 கிராம் கேரள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 31 வயதுடைய நெல்லியடி மற்றும் வெல்வெடிதுரை பகுதிகளில் குடியிருப்பாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இலங்கை கடல் பகுதியில் நடக்கும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.