பானமவில் கடற்படையினரால் நீர் சறுக்கல் விளையாட்டு கிளப் திறந்து வைப்பு

இலங்கை கடற்படை அண்மையில் பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்ட கிளப்பை நிறுவியுள்ளது. பானம கடற்கரையில் நிறுவப்பட்ட இந்த புதிய வசதிகள், தென்கிழக்கு கடற்படைப் பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கமகேவினால் இம்மாதம் 25ம் திகதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இப்பகுதியில் நீர்சறுக்கள் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த வசதிகள் கடற்படையின் வளம் மற்றும் நிபுணத்துவமிக்க ஆளணியினை பயன்படுத்துவதன் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கரையோரத்தில் பானம ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகவும், நாட்டின் நீர் சறுக்கல் விளையாட்டிற்கு புகழ்பெற்ற இடமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.