நில்வெல்ல நீருக்கடியில் கலைக்கூடம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நில்வெல்ல கடற்கரை இலங்கையின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு அழகான கடற்கரையாகும், குறித்த அழகான கடற்கரையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்ட நில்வெல்ல நீருக்கடியில் கலைக்கூடம் (Underwater Gallery Nilwella) இன்று (2021 ஏப்ரல் 10) கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு நாமல் ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
10 Apr 2021



