இலங்கை விமானப்படைத் தளபதி கடற்படைத் தளபதியை கடற்படைத் தலைமையகத்தில் சந்திப்பு

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் இன்று (2020 அக்டோபர் 29) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

அண்மையில் ஓய்வு பெற உள்ள விமானப்படைத் தளபதி, முறைப்படி கடற்படைத் தளபதியை சந்திக்க வருகை தந்த போது கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை மரபுகளின்படி மரியாதை செலுத்தப்பட்டதுடன் கடற்படையின் துனை தலைமை அதிகாரியும், மேற்கு கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களால் அவரை அன்புடன் வரவேற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடற்படையின் தலைமை அதிகாரி உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தனது பதவி காலத்தில் கடற்படைக்கு வழங்கிய உதவிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நன்றியை தெரிவித்ததுடன் அண்மையில் ஓய்வு பெற உள்ள விமானப்படைத் தளபதியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினரும் நினைவு சின்னங்கள் பரிமாறிக்கொண்டனர்.