கடற்படைத் தளபதி பெல்லன்வில ரஜ மஹா விஹாரையின் வருடாந்திர எசல பெரஹரவில் கலந்து கொண்டார்

பெல்லன்வில ரஜமஹ விஹாரையின் வருடாந்திர எசலா விழா மற்றும் பெரஹெர 2020 ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெற்றது. 2020 ஆகஸ்ட் 22 ஆம் திகதி நடைபெற்ற ‘பாவாட பெரஹெர’ நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பங்கேற்றார்.

இதுக்கு முந்தைய ஆண்டுகளில், 18 நாட்களாக நடைபெற்ற பெல்லன்வில ரஜ மஹா விஹாரயவில் வருடாந்திர எசல விழா மற்றும் பெரஹெர, இந்த முறை சுகாதார ஆலோசனை காரணங்களால் விஹாராதிபதி கலாநிதி பெல்லன்வில தம்மரதன தேரரின் அறிவுறுத்தலின் பேரில் சடங்குகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தி இடம்பெற்றது. விஹாராதிபதியின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 'பாவாட பெரஹெர 'வில் பங்கேற்று, விஹாரய வளாகத்திலிருந்து புனித நினைவுச்சின்னங்கள் கலசத்தை நினைவுச்சின்ன மண்டபத்திற்கு கொண்டு செல்லும் சிறப்பான நிகழ்வில் பங்கேற்றார்.