இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாத் அலி, தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2020 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் சஜாத் அலி அவரது மூன்று ஆண்டு பதவிக்காலத்தின் முடிவை முன்னிட்டு கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார். அவரது பதவிக்காலத்தில் இலங்கை கடற்படைக்கு அளித்த ஒத்துழைப்புக்காக வெளியேறும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகருக்கு நன்றியைத் தெரிவித்த கடற்படைத் தளபதி, அவரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு சின்னங்களும் பரிமாற்றப்பட்டது.