புதிய கடற்படைத் தளபதி செயல் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரால் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் இன்று (2020 ஜூலை 21) செயல் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இவ்வாறு வருகை தந்த புதிய கடற்படைத் தளபதிக்கு இலங்கை இராணுவத்தினரால் சிறப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேலும் வைஸ் அட்மிரால் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடற்படை தளபதியாக கடமையேற்ற பின் இராணுவத் தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவாகும்.

அங்கு முதலில் செயல் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதி 24 வது புதிய கடற்படைத் தளபதி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மேலும் இன் நிகழ்வுக்காக பல இராணுவ மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.