05 சட்டவிரோத வலைகளைக் கொண்ட மூன்று நபர்கள் கடற்படையால் கைது

கடற்படையினர் இன்று (2020 பிப்ரவரி 28,) மன்னார் வன்காலே கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது ஐந்து சட்டவிரோத வலைகளைக் கொண்ட மூன்று பேரை கைது செய்யப்பட்டனர்.

கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மன்னார் வன்காலே கடற்கரையில் ரோந்து சென்றபோது ஐந்து தடை செய்யப்பட்ட வலைகளுடன் மூன்று பேரை கைது செய்தனர். அங்கு ஒரு டிங்கி படகு மற்றும் மீன்பிடி பொருட்கள் கடற்படை கைப்பற்றியதுடன், கைதுசெய்யப்பட்ட நபர்கள் 35, 38 மற்றும் 57 வயதுடைய அப்பகுதியில் வசிப்பவர்கள் என்பதை மேலும் உறுதிப்படுத்தினர்.

அதன் படி, குறித்த நபர்கள், டிங்கி படகு மற்றும் தடை செய்யப்பட்ட வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.