சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையால் கைது

சின்னகுடிரிப்பு மீன்வள துறைமுகத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட (3) பேரை 2020 பிப்ரவரி 27 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படை மண்டலத்தின் கடல்சார் மற்றும் மீன் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வடமேற்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் சின்னகுடிரிப்பு மீன்வள துறைமுகம் சுற்றியுள்ள கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சட்டவிரோத இரவு சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் 2020 ஜனவரி 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அங்கு பிடிக்கப்பட்ட 12 கிலோ கிராம் மீன், டிங்கி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் கடற்படையால் கைது செய்யபட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் 43 முதல் 50 வயதுடைய பல்லிவாசதுரை மற்றும் கற்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. 12 கிலோ மீன், டிங்கி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி மீன்வள செயல்பாட்டு அலுவலரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.