சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் மூன்று படகுகள் 2020 பிப்ரவரி 15 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட அனலதீவு வடக்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட வழக்கமான ரோந்துப் பணியின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மூன்று இந்திய மீன்பிடி படகுகளுடன் அங்கு இருந்த இந்திய மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் படி கைது செய்யப்பட்ட குறித்த படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்கபடை கப்பல் எலார நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இலங்கை கடற்படைக் கப்பல் 'எலார' நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்த மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோர காவல்படையினர் மூலம் யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். மேலும், மூன்று இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படைக் கப்பல் எலார நிறுவனத்தில் தடுத்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்திய ரோந்துப்பணியின் விளைவாக, இலங்கை பிராந்திய கடல் எல்லை மீறும் இந்திய மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதுடன் மேலும், இலங்கையின் மீன்வள வளங்களை பாதுகாப்பதற்கும் நாட்டின் மீனவர்களைப் பாதுகாப்பதற்கும் கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.