சட்டவிரோத மீன்பிடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையால் கைது

ஸ்பியர் துப்பாக்கியைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேரை இன்று (2020 பிப்ரவரி 02) கடற்படை கைது செய்துள்ளனர்.

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி, கொழும்பிலிருந்து எட்டு (8) கடல் மைல் தொலைவில் உள்ள ரத்மலான கடல் பகுதியில் சட்டவிரோதமான ஸ்பியர் துப்பாக்கிகளை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்த இரண்டு ஸ்பியர் துப்பாக்கிகள், இரண்டு ஜோடி கால் துடுப்புகள், 10 ஆக்ஸிஜன் டாங்கிகள், ஒரு ஜி.பி.எஸ், ஒரு டிங்கி படகு கடற்படையால் கைது செய்யப்பட்டன. மேலதிக விசாரணையில் சந்தேக நபர்கள் தெஹிவலை பகுதியில் இருந்து கடல்ளுக்டகுச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதுடன், சந்தேக நபர்கள் 57 மற்றும் 61 வயதுடைய பெல்லன்வில, ஹேன்கமுவ மற்றும் ஹோமாகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது மேலும் தெரிய வந்துள்ளது.

மேலும், கடற்படையால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் (03), இரண்டு ஸ்பியர் கன் (02), இரண்டு ஜோடி (2) கால் துடுப்புகள் (2), பத்து (10) ஆக்ஸிஜன் தொட்டிகள், ஒரு ஜி.பி.எஸ் இயந்திரம் (01), ஒரு டிங்கி படகு மேலதிக விசாரணைகளுக்காக திக்ஓவிட கடலோர காவல்படை துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.