சட்டவிரோதமாக பிடித்த 56 கடல் அட்டைகளுடன் 05 நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோதமாக பிடித்த 56 கடல் அட்டைகளுடன் 05 நபர்கள் சிலாவத்துர, கொக்குபடயான் கடற்கரையில் வைத்து இன்று (நவம்பர் 05) கடற்படையால் கைது செய்ய்பட்டனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட சுழியோடி உபகரணங்கள் மற்றும் சுழியோடி கருவிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடிக்கச் சென்ற 5 பேருடன் ஒரு டிங்கி படகு, ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம், 56 கடல் அட்டைகள் மற்றும் பல சுழியோடி உபகரணங்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டன.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 38 வயது வரைலான சிலாவத்துர பகுதியில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், ஒரு டிங்கி படகு, ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் பிற மீன்பிடி உபகரனங்கள் மன்னார் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.