சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 அக்டோபர் 19 ஆம் திகதி நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் 43600 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளை மற்றும் நீர்கொழும்பு போலீஸார் இனைந்து நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 2180 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு கடற்படையினர் 43600 சிகரெட்டுகளை மீட்டுள்ளனர் மற்றும் அவற்றை விற்பனைக்கு தயாராக ஒரு வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இவ்வாரு கைது செய்யப்பட்ன.

கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு பகுதியில் வசிக்கின்ற 23 வயதானவர் என கண்டரியப்பட்டுள்ளதுடன். இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு போலீஸ் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.