980 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரினால் கண்டு படிப்பு

2019 ஜூலை 19 ஆம் திகதி புத்தலம் எரம்புகோடெல்ல பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது 980 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களினால், எரம்புகோடெல்ல பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது, இந்த பீடி இலைகள் கடற்கரையில் எஞ்சியிருப்பதைக் கண்டனர். பொதிகளில் இருந்த பீடி குறித்த இலைகள் இரண்டு டிங்கிகளில் மறைக்கப்பட்டுள்ள போது மீட்கப்பட்டது. கண்டுபிடிக்கப்ட்ட பீடிபொதிகள் கொழும்பு சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

மேலும் கடற்படை அடிக்கடி மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிற்குள் கடத்த முயன்ற ஏராளமான போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.