இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி பருத்தித்துறை கலங்கரை விளக்கத்துக்கு 16 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள வட மேற்கு பகுதி கடலில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேர் மற்றும் அவர்களின் மூன்று (03) படகுகள் (Dhow) இன்று (ஏப்ரல் 04) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டன.

அதன் படி கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள், இலங்கை கடற்படை கப்பல் “உத்தர” நிருவனத்துக்கு கொன்டுவந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.