கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 14) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இங்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை விமானப்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டது. இச் சந்திப்பு வைஸ் அட்மிரல் சில்வா அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் விமானப்படை தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பாகும்.

அங்கு புதிய கடற்படைத் தளபதி அவர்களுக்கு விமானப்படை தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் எதிர்கால நடவடிக்கைகளின் போது விமானப்படையின் விரிவாக்கப்பட்ட ஆதரவு கடற்படைக்கு வழங்கப்படும் என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையேயான நட்பு மற்றும் நல்லுறவை குறித்து நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக விமானப்படை இயக்குனர் ஜெனரல்கள் உட்பட பல மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.