இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் வைஸ் அட்மிரல் அஜித் குமார் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் வைஸ் அட்மிரல் அஜித் குமார் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு அவரை கடற்படையின் விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது.

அதன் பின் இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களை சந்திதித்துள்ளார். குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மேலும் வைஸ் அட்மிரல் குமார் அவர்கள் கடற்படை டொக்யாடில் மற்றும் கடல்சார் அகாடமில் கன்கானிப்பு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார். இன் நிகழ்வுக்காக பணிப்பாளர் நாயகம் பணியாளர் ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன அவர்கள் கடல்சார் அகாடமில் தளபதி கொமடோர் கலன ஜினதாச அவர்கள் மற்றும் இலங்கையில் இந்திய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஓ அவர்கள் கழந்துகொன்டனர்.