மேலும் 05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (27) மெதிரிகிரிய பிசோபன்டார, நாகர்புர,திக்கல்புர, திவுலங்கடவல ஆகிய கிராமங்களில் மற்றும் கடற்படை முகாம் அமதூவ்வில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் மெதிரிகிரிய பிசோபன்டார பகுதியில் 450 குடும்பங்களுக்கும், நாகர்பூர பகுதியில் 375 குடும்பங்களுக்கும் திக்கல்புர பகுதியில் 420 குடும்பங்களுக்கும், திவுலங்கடவல பகுதியில் 360 குடும்பங்களுக்கும், 30 கடற்படையினரும் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன. மேலும் மெதிரிகிரிய பகுதியில் நிருவப்பட்டுள்ள 04 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. அமதூவ கடற்படை முகாமில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்காக கடறபடை மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது வரை 220 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 106,590 குடும்பங்களுக்கு மற்றும் 76,520 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.