சீன புதிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை தளபதியை சந்திப்பு
 

இலங்கை புதிய சீன பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட கேணல் க்சூ ஜியான்வெய் அவர்கள் இன்று(04) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. முன்னாள் சீன பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேணல் லி சென்க்லின் அவர்கள் மற்றும் உதவி இலங்கை சீனா பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் சாங் இச்சந்திப்பின் கலந்துக் கொண்டனர்.