கிழக்கு கடற்படை கட்டளையின் உதவியுடன் திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் நீர் விளையாட்டு போட்டித்தொடறொன்று நடைபெற்றது

நீர் விளையாட்டுக்கான ஆர்வத்தையும் திறனையும் வளர்க்கும் நோக்கில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் அமைந்துள்ள திஸ்ஸ கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நீர் விளையாட்டு போட்டித்தொடறொன்று 2021 ஏப்ரல் 05, அன்று திருகோணமலை துறைமுகத்தில் உள்ள பெப்பர்போட் (Pepperpot) இறங்குதுறைக்கு முன்னால் கடலில் கிழக்கு கடற்படை கட்டளையால் நடத்தப்பட்டது. கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வைய்.என்.ஜெயரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் 4-வது துரித தாக்குதல் படகு படை மற்றும் கடல் அறிவியல் பீடத்தின் கடற்படை தொழில்நுட்ப பாடசாலை இனைந்து இந்த போட்டித்தொடரை ஏற்பாடு செய்தது.

07 Apr 2021