நடவடிக்கை செய்தி

கடலில் சுகவீனமுற்ற நிலையில் இருந்த மேலும் ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

பேருவலைக்கு தென்மேற்கே சுமார் 85 கடல் மைல் (சுமார் 157 கி.மீ) ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த மற்றொரு மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்கு அனுப்ப இன்று (2021 ஜூன் 07) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

07 Jun 2021

முப்பத்திரண்டு (32) கடற்படை நிவாரணக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளில்

கடும் மழை காரணமாக மேற்கு, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள ஆபாயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பு, கம்பஹ, களுத்துறை, காலி மற்றும் இரத்னபுரி மாவட்டங்களை உள்ளடக்கி 32 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது. இந்த நிவாரண குழுக்கள் இன்றைய தினமும் தொடர்ந்து (2021 ஜூன் 07) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது.

07 Jun 2021

ரூ .28 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைது

நகர்கோவில் கடற்கரை பகுதியில் இன்று (2021 ஜூன் 07) நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 96 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

07 Jun 2021

MV X-PRESS PEARL கப்பலின் கசிவுகள் தொடர்பில் கடற்படையின் சுழியோடிகள் சிறப்பு ஆய்வு

தீ அனர்த்தத்திற்கு உள்ளான MV X-PRESS PEARL கப்பலில் ஏதேனும் கசிவுகள் ஏற்படுகின்றதா என்பது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் கடற்படையின் அனுபவம் வாய்ந்த சுழியோடிகள் இன்று (2021 ஜூன் 06) ஈடுபட்டுள்ளனர்.

06 Jun 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹ மாவட்டத்தில் மேலும் 27 நபர்கள் கடற்படையினரால் மீட்பு

கடற்படை நிவாரண குழுக்கள் இன்று (ஜூன் 06, 2021) கம்பஹ மாவட்டத்தில் ஜா-எல பகுதியில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 27 நபர்களை மீட்டனர்.

06 Jun 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹ மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 66 நபர்கள் கடற்படையினரால் மீட்பு

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு, தெற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களை உள்ளடக்கி 33 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது. அதன் படி இன்று (2021 ஜூன் 05) பிற்பகல் கடற்படையினரால் கம்பஹ மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 66 பேர் மீட்கப்பட்டனர்.

05 Jun 2021

‘345 கடல் மைல் தூரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி’என்ற தலைப்பின் கீழ் 2021 ஜூன் 04 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீடுயுடன் தொடர்பானது

இலங்கையின் தென்கிழக்கில் உள்ள பெரிய இராவண கலங்கரை விளக்கத்திலிருந்து (Great Basses) சுமார் 345 கடல் மைல் (சுமார் 638 கி.மீ) தூரத்தில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப கடற்படை இன்று (ஜூன் 05, 2021) நடவடிக்கை எடுத்துள்ளது.

05 Jun 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தலம் மாவட்டத்தில் 29 நபர்கள் கடற்படையால் மீட்பு

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணத்தினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு, தெற்கு, சபராகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உள்ளடக்கி கடற்படை விரைவான பதில் மற்றும் மீட்பு பிரிவின் 16 குழுக்கள் கடற்படை அனுப்பியுள்ளது. அதன் படி 2021 ஜூன் 4 அன்று புத்தலம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 29 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டது.

05 Jun 2021

கடும் மழை காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மழை நீரில் கலந்த உலை எண்ணெயைக் குறைக்க கடற்படையால் நடவடிக்கை

பலத்த மழை காரணமாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள உலை எண்ணெயின்(Furnace oil) எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் (Separator Tanks) இருந்து வெளியேறும் மழை நீர் வெளிப்புற சூழலில் நிரம்பி வழிகிறது. அதன் படி வெளிப்புற சூழலுக்கு வெளிப்படும் உலை எண்ணெயைத் அகற்ற மற்றும் தடுக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படை இன்று (2021 ஜூன் 4,) மாலை சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

04 Jun 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் உடனடி நிவாரணம்

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கி 13 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது.

04 Jun 2021