நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த மூன்று இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் இலங்கைக் கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 07 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய படகுகளுடன் 11 இந்திய மீனவர்களை கைது செய்தனர்.

08 Feb 2022

மன்னாரில் கடற்படையினரால் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 01 கிலோ மற்றும் 76 கிராம் ஐஸ் ரக போதை பொருளை (Crystal Methamphetamine) கைப்பற்றினர்.

05 Feb 2022

ரூ .24 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் 2022 ஜனவரி மாதம் 21 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 80 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் கைது செய்தனர்.

22 Jan 2022

வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடைமுறைகளை நிருத்துவதுக்காக கடற்படையின் நடவடிக்கைகள்

2022 ஜனவரி 17 மற்றும் 20 ஆம் திகதிகளில் மன்னார் மற்றும் ஏறக்கண்டி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தத் தயாராக இருந்த 11 நீர் ஜெல் குச்சிகளுடன் பல வெடிபொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

21 Jan 2022

ஐஸ் போதைப்பொருட்கள் கொண்ட ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று மாலை (2022 ஜனவரி 19) தலைமன்னார் ஊறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 485 கிராம் ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

19 Jan 2022

பலநாள் படகில் இருந்து தவறி விழுந்து 18 மணி நேரத்திற்கும் மேலாக கடலில் தத்தளித்த மீனவரை கடற்படையினர் மீட்டனர்

2022 ஜனவரி 08 ஆம் திகதி பிற்பகல் தங்காலை கடற்பரப்பில் 'லக்விது 3' என்ற பல நாள் மீன்பிடி படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர் ஒருவர் இன்று (2022 ஜனவரி 09) கடற்படையின் A 543 கப்பலினால் மீட்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

09 Jan 2022

கடலில் பாதிக்கப்பட்ட இலங்கை மீன்பிடி படகில் இருந்த மீனவர்களை மீட்க கடற்படையினரின் உதவி

இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட 'அசேல புதா II' என்ற பல நாள் மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து (05) மீனவர்களை கடற்படையின் ஒருங்கிணைப்பில் MV PGC Periklis (IMO 9796171) என்ற வெளிநாட்டு கப்பல் மூலம் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் அவர்களை சிகிச்சைக்காக இன்று (2022 ஜனவரி 08) காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

08 Jan 2022

2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முலம் 15.86 பில்லியன் ரூபா வீதிப் பெறுமதியான போதைப் பொருட்களை கடற்படை கைப்பற்றியுள்ளது

தேசத்தின் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நனவாக்குவதில் இலங்கை கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இவ்வாறாக, 2021 ஆம் ஆண்டில் மாத்திரம், கடற்படையினர் இலங்கை கடற்பகுதியில் மற்றும் சர்வதேச கடல்பகுதியில் மேற்கொண்டுள்ள வெற்றிகரமான போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது 15.86 பில்லியன் ரூபா வீதிப் பெறுமதியான போதைப் பொருட்களை கைப்பற்றப்பட்டது.

31 Dec 2021

26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுகந்திபுரத்தில் கடற்படையினரால் 2021 டிசம்பர் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

31 Dec 2021

‘கிண்ணியாவில் படகுப்பாதை கவிழ்ந்ததில் காணாமல் போனவர்களை தேடி கடற்படையின் நடவடிக்கை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியுடன் தொடர்புடையது.

இன்று (2021 நவம்பர் 23) காலை 0730 மணியளவில் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சங்கேணி பாலத்திற்கு அருகில் மக்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதுடன் அங்கு காணாமல் போனவர்களை தேடி கடற்படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இன்று பிற்பகல் நிறைவடைந்தது.

23 Nov 2021