நடவடிக்கை செய்தி

காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

காலி பகுதியில் உள்ள வக்வெல்ல மற்றும் தொடங்கொட பாலங்களூடாக கடலுக்கு செல்லும் கிங் ஆற்றில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

23 Sep 2020

32 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது

கற்பிட்டி பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகிலுள்ள பரமுனை தீவில் 2020 செப்டம்பர் 17 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 32 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது.

18 Sep 2020

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 520 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார் முண்தலம்பிட்டி கடற்கரையில் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட சுமார் 520 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

17 Sep 2020

வெடிபொருட்கள் கொண்ட இரண்டு நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

ශஇலங்கை கடற்படையினர் காவல்துறை சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி சாம்பூர் பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்களுடன் (02) பல வாட்டர் ஜெல் குச்சிகள் கைது செய்தனர்.

17 Sep 2020

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் இன்று (2020 செப்டம்பர் 16) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

16 Sep 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டது

வட மத்திய மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏராளமான மீனவர்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

16 Sep 2020

முல்லைதீவு, முல்லிவைக்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் இருந்து பல வெடிபொருட்கள் கடற்படையால் மீட்பு

முல்லைதீவு, முல்லிவைக்கால் பகுதியில் 2020 செப்டம்பர் 15 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஒரு தனியார் நிலத்தில் இருந்து பல வெடிபொருட்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன.

16 Sep 2020

கடற்படை உதவியுடன் உள்ளூர் கஞ்சா சேனையொன்று சுற்றிவளைப்பு

கடற்படை மற்றும் சூரியவெவ காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 செப்டம்பர் 11 அன்று தனமல்வில, பலஹருவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது உள்ளூர் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த சேனை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Sep 2020

அவித்தாவ பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

பெந்தர ஆற்றின் அவித்தாவ பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை கடற்படை கடந்த வாரம் அகற்றி நீர் செல்வதுக்கான தடைகளை நீக்கியுள்ளது.

11 Sep 2020

ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட 05 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடந்த சில நாட்களில் கடற்படை, காவல்துறை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஆகியவை ஒருங்கினைந்து மன்னார், சாந்திபுரம், புல்மூட்டை ஜின்னபுரம், காலி ரயில் நிலையம் மற்றும் ரிச்மண்ட் கந்த ஆகிய இடங்களில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகள் மூலம் ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டன.

11 Sep 2020