சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு கேரள கஞ்சா பொதியை மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஏப்ரல் 20) காலை மன்னார் மணல் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 81 கிலோ 220 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

கடல் வழியாக மெற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த கடற்படை பல ரோந்துப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தின் கடற்படையினர் இன்று (2022 ஏப்ரல் 20) காலை மன்னார் கடற்பகுதியில் மெற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மணல் மேட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு ஒன்றை அவதானித்து ஆய்வு செய்ததுடன் அங்கு 25 மூட்டைகளில் அடைக்கப்பட்ட சுமார் 81 கிலோ 220 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். கடற்படையின் தேடுதல் நடவடிக்கைகளால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்கள் கேரள கஞ்சாவை விட்டுச்சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும், கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் மொத்த வீதி பெறுமதி 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.