வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் ஒரு இந்திய மின்பிடி படகு கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடமேற்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பல இந்திய மின்பிடி படகுகள் விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2022 மார்ச் 30 ஆம் திகதி இரவு விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும், இந்த நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களுடன் இந்திய மின்பிடி படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சர்வதேச கடல் எல்லையை மீறி பல இந்திய மீன்பிடி படகுகள் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வடமேற்கே இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததை அவதானித்துள்ள கடற்படையினர் குறித்த மீன்பிடி படகுகள் விரட்டுவதற்காக வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட 4 வது விரைவு தாக்குதல் படைப்பிரிவுக்கு சொந்தமான விரைவு தாக்குதல் படகொன்று அனுப்பியுள்ளது. அப்போது ஒரு இந்திய மின்பிடி படகொன்றுடன் மூன்று (03) இந்திய மீனவர்களை மீன்பிடி சாதனங்களுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை கடலோர காவல்படையினரால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திற்கு ஒப்படைக்க காங்கேசன்துறை மைலடி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

மேலும், 2022 மார்ச் 28 ஆம் திகதி நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு மீன்பிடி படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் கடற்றொழில் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.