கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 24 கடல் மைல் (சுமார் 44 கி.மீ) தூரத்தில் கிழக்கு பகுதி கடலில் நோய்வாய்ப்பட்ட இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப கடற்படை 2022 மார்ச் 16 ஆம் திகதி இரவு நடவடிக்கை எடுத்துள்ளது.

2022 பெப்ரவரி 24 ஆம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற பல நாள் மீன்பிடி படகான ‘நுவந்தி 1’ என்ற படகில் பயணித்த மீனவர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக அழைத்து வர தென் கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட 4 வது வேகப்பிரிவு ரோந்து படையின் P-422 படகு அனுப்பியது. நோய்வாய்ப்பட்ட மீனவரை துரித தாக்குதல் படகு மூலம் மீட்கப்பட்ட பிறகு, முதலுதவி அளிக்கப்பட்டு, அவர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அதன் பின் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டும் கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.