இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடமேற்கு திசையில் இலங்கைக் கடற்பரப்பில் இன்று (2022 பிப்ரவரி 19) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு இந்திய படகுடன் 06 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர் மீனவ சமூகத்துக்கு ஏற்படுகின்ற தாக்கம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளையின் 4 வது விரைவு தாக்குதல் படையணியின் விரைவு தாக்குதல் படகொன்று யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடமேற்கு கடற்பரப்பில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது சர்வதேச கடல் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்களை இந்திய மின்பிடி படகொன்றுடன் கைப்பற்றப்பட்டன.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க மேற்கொண்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இலங்கையின் கடற்றொழில் வளத்தைப் பாதுகாப்பதுடன், இலங்கையின் கரையோரப் பகுதிகளையும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த ரோந்துப் பணியில் கைப்பற்றப்பட்ட தோகை உட்பட, இதுவரை 2022 பெப்ரவரி மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்களுடன் 06 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.