இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

தலைமன்னாருக்கு வடக்கு இலங்கைக் கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 12 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய படகுகளுடன் 12 இந்திய மீனவர் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர் மீனவ சமூகத்துக்கு ஏற்படுகின்ற தாக்கம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, 2022 பெப்ரவரி 12 ஆம் திகதி வட மத்திய கடற்படைக் கட்டளைக்கு விஜயம் செய்து அதன் செயற்பாட்டுத் தயார்நிலையை மீளாய்வு செய்து, கட்டளையின் கடற்படைப் பிரிவுகள் மற்றும் கடற்படை நிறுவனங்களின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டளைகளை வழங்கினார். மேலும், சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் உட்பட அனைத்து வகையான சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவது மற்றும் இலங்கை கடற்பரப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அன்றைய தினம் வடமத்திய கடற்படை கட்டளையில் தங்கியிருந்த கடற்படைத் தளபதி, கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை தொடர்ந்து பார்வையிட்டார்.

அதன் படி, வடமத்திய கடற்படை கட்டளையின் 4 வது விரைவு தாக்குதல் படையணியின் விரைவு தாக்குதல் படகுகளை பயன்படுத்தி தலைமன்னாரின் வடக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது சர்வதேச கடல் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமான bottom trawling முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை 02 இந்திய மின்பிடி படகுகளுடன் கைப்பற்றப்பட்டன.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க மேற்கொண்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் இலங்கைக் கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 07 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய படகுகளுடன் 11 இந்திய மீனவர்களை கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கும் இலங்கையின் மீன்வளம் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.