நடவடிக்கை செய்தி

2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முலம் 15.86 பில்லியன் ரூபா வீதிப் பெறுமதியான போதைப் பொருட்களை கடற்படை கைப்பற்றியுள்ளது

தேசத்தின் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நனவாக்குவதில் இலங்கை கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இவ்வாறாக, 2021 ஆம் ஆண்டில் மாத்திரம், கடற்படையினர் இலங்கை கடற்பகுதியில் மற்றும் சர்வதேச கடல்பகுதியில் மேற்கொண்டுள்ள வெற்றிகரமான போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது 15.86 பில்லியன் ரூபா வீதிப் பெறுமதியான போதைப் பொருட்களை கைப்பற்றப்பட்டது.

31 Dec 2021

26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுகந்திபுரத்தில் கடற்படையினரால் 2021 டிசம்பர் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

31 Dec 2021