சட்டவிரோத போதைப்பொருட்கள் கொண்ட மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் மணல் குன்றுகளில் இன்று (2021 நவம்பர் 15) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 03 கிலோ மற்றும் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) 03 சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி படகையும் கைது செய்யப்பட்டது.

கடல் வழியாக நடத்தப்படுகின்ற சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதுக்காக கடற்படையால் தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் மற்றும் கடலில் அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கடற்படை மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த கடற்படையினர் இன்று (2021 நவம்பர் 15) காலை தலைமன்னார் மணல் திட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை அவதானித்து சோதனை செய்தனர். அப்போது குறித்த டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 கிலோ மற்றும் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளை (Crystal Methamphetamine) கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் தெரு மதிப்பு 24 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பேசாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.