சிலாபம் கடலில் இருந்து கேரள கஞ்சாவின் மற்றொரு பங்கை கடற்படை கைப்பற்றியது

இலங்கை கடற்படை சிலாபம், முக்கு தொடுவாவ கடற்கரையில் இன்று (2021 ஜூன் 20) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த 23 கிலோவிற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர்.

சிலாபம், முக்கு தொடுவாவ கடற்கரையில் இன்று (2021 ஜூன் 20) வடமேற்கு கடற்படை கட்டளை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த 10 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட 23 கிலோ மற்றும் 100 கிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன்படி, 2021 ஜூன் 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மட்டும் சிலாபம் கடல் பகுதியில் இருந்து சுமார் 308 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

‍‍‍மேலும், சிலாபம் பகுதியில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபடும் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை சிலாபம் பொலிஸாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.