சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் பீடி இலைகள் கடற்படையினரால் பறிமுதல்

மன்னார், கொந்தபிட்டி மற்றும் சிலாவத்துர, அரிப்பு கடலோரப் பகுதிகளில் இன்று (2021 ஜூன் 16) காலை நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் 294 கிலோகிராம் பீடி இலைகள் (Kendu Leaves) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி இன்று (2021 ஜூன் 16) மன்னார், கொந்தபிட்டி கடற்கரை பகுதியில் வட மத்திய கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை விசாரித்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 13 சாக்குகளில் இருந்த சுமார் 370 கிலோ மற்றும் 600 கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது, மேலும், குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இன்று (2021 ஜூன் 16) காலை அரிப்பு கடற்கரையில் வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள ஒரு ரோந்துப் பணியின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற மூன்று சாக்குகளில் இருந்த 294 கிலோ 100 கிராம் பீடி இலைகளைக் (Kendu Leaves) கண்டுபிடிக்கப்பட்டது.

கொவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 மற்றும் 37 வயதுக்குட்பட்ட மன்னார் மற்றும் பல்லெமுனை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்காக மன்னார் பொது சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் பீடி இலைகள் (Kendu Leaves) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டது.