ரூ .71 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

பருத்தித்துறைக்கு வடக்கு கடல் பகுதியில் இன்று (2021 ஜூன் 14) நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 237 கிலோ மற்றும் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் மூன்று (03) சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2021 ஜூன் 14 ஆம் திகதி பருத்தித்துறைக்கு வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு ரோந்துப்பணியின் போது, கரையை நோக்கி வந்துகொண்டு இருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்தனர். அப்போது குளித்த படகில் இருந்து இரண்டு கேரள கஞ்சா சாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த டிங்கி படகு மற்றும் அங்கிருந்த மூன்று (03) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்ட மேலும் ஆறு கேரள கஞ்சா சாக்குகள் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, இந்த முழு நடவடிக்கை மூலம் 08 சாக்குகளில் இருந்த சுமார் 237 கிலோ மற்றும் 500 கிராம் (ஈரமான எடையில்) கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கேரள கஞ்சாவை சர்வதேச கடல் எல்லையில் வைத்து டிங்கி படகுக்கு மாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ .71 மில்லியனுக்கும் மேல் என்று நம்பப்படுகிறது.

கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 29 வயதுக்குட்பட்ட பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படை மற்றும் கடலோர காவல்படை இப்பகுதியில் மேலும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.