பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகொன்றில் இருந்த மீனவர்களை மீட்க கடற்படை பங்களிப்பு

இலங்கைக்கு தெற்கு கடல் பகுதியில் பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகொன்றில் இருந்த மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர இன்று (2021 ஜூன் 02) கடற்படை உதவி வழங்கியது.

மிரிஸ்ஸ மீன்வளத் துறைமுகத்தில் இருந்து 2021 மே மாதம் 31ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நாங்கு மீனவர்களுடன் கடலுக்கு சென்ற ஒரு நாள் மீன்பிடிப் படகொன்று (பதிவு எண்: IMUL-A-0077 CBO) சீரற்ற வானிலை மற்றும் கரடுமுரடான கடல் அலைகள் காரணமாக சுமார் 40 கடல் மைல் ( சுமார் 74 கி.மீ. ) காலிக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் கவிழ்ந்துள்ளதுடன் அங்கு இருந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் இப்பகுதியில் இருந்த மற்றொரு பல நாள் மீன்பிடிப் படகொன்று மூலம் மூன்று மீனவர்களை மீட்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட மூன்று மீனவர்களின் ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்து இருக்கிறார்.

இது குறித்து மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்துள்ளதுடன் தெற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான துரித தாக்குதல் படகொண்று பாதிக்கப்பட்ட மீனவர்களை கொண்டுவர உடனடியாக அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் படி குறித்த துரித தாக்குதல் படகு மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட பின் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காணாமல் போன மீனவரை தேடி இலங்கை கடற்படை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ள கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.