சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 நபர்கள் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது

இலங்கை கடற்படையால் 2020 நவம்பர் 12 முதல் டிசம்பர் 13 வரை தீவின் பல்வேறு கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 நபர்கள், அவர்களின் மீன்பிடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, நவம்பர் 19, 26 மற்றும் டிசம்பர் 01, 07 ஆகிய திகதிகளில் மன்னார் வலைபாடு, பல்லிமுனை மற்றும் சவுத்பார் கடல் பகுதிகளில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய நடவடிக்கைகளின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் இரவில் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 32 நபர்கள், 08 மீன்பிடி படகுகள், 08 தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைது செய்யப்பட்டது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 நவம்பர் 12 ஆம் திகதி மற்றும் டிசம்பர் 08,10 ஆகிய திகதிகளில் நிலாவேலி அடுக்குபாடு, திருகோணமலை கோனேஷ்வரம் மற்றும் பவுல்துடுவ ஆகிய கடல் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உரிம நிபந்தனைகளை மீறி மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 19 நபர்கள், 05 மீன்பிடி படகுகள், 03 தடைசெய்யப்பட்ட வலைகளுடன் மேலும் பல மீன்பிடி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், 2020 டிசம்பர் 7அன்று, வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு டிங்கி படகுகளை புத்தலம் உச்சமுனை கடல் பகுதியில் கவனித்து போலி பதிவு எண்ணை கொண்ட டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களை கைது செய்தனர்.

மேலும், வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் டிசம்பர் 4 ம் திகதி மாதகல் பண்டதிரிப்பு பகுதியில் இலவலை பொலிஸுடன் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 3840 சிப்பிகளை வைத்திருந்த ஒரு நபர் (01) கைது செய்யப்பட்டார்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 முதல் 64 வயது வரையிலான மன்னார், நிலாவேலி, பொடுவக்கட்டு, குச்சவேலி, கின்னியா, கல்பிட்டி மற்றும் இளவாலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் மீன்பிடிக் படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மேலதிக விசாரனைக்காக ஜெயபுரம் மற்றும் இளவாலை காவல் நிலையங்களிடம், மன்னார் மற்றும் திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநர்களிடம் மற்றும் கல்பிட்டி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.