கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 3538 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது

கடந்த சில வாரங்களில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, நாட்டிற்குள் கடத்த முயன்ற 3538 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூன்று (03) இந்தியர்கள் உட்பட 07 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 டிசம்பர் 12 ஆம் திகதி புத்தலம் குதிரமலைக்கு மேற்கு கடல் பகுதியில் கடற்கரை ரோந்து படகுகள் பயன்படுத்தி சர்வதேச கடல் எல்லைக்கு (IMBL) அருகே மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் பொது சந்தேகத்திற்கிடமான இந்திய படகொன்று கண்கானித்தனர். அதன் பின் மேற்கொண்டுள்ள மேலதிக விசாரணையில் 64 சாக்குகளில் நிரப்பப்பட்ட 2404 கிலோ மற்றும் 300 கிராம் உலர்ந்த மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த மஞ்சளுடன் படகில் இருந்த இந்திய நாட்டினர் 03 நபரும் படகும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. கொண்டு வந்த மஞ்சள் பொதி இலங்கை கப்பலுக்கு கடலில் மாற்ற கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்ததாக கடற்படை சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், டிசம்பர் 11 ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கல்பிட்டி டச்சு விரிகுடா பகுதியில் மற்றொரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அங்கு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டது. அப்போது படகில் இருந்து 10 பைகளில் நிரப்பப்பட்ட 480 கிலோ கிராம் உலர் மஞ்சளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 நவம்பர் 20 ஆம் திகதி மன்னார் வன்காலைபாடு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டது. அப்போது படகில் இருந்து 18 பொதிகளில் நிரப்பப்பட்ட 654 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 02 சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்கிடமான டிங்கி படகும் கைப்பற்றப்பட்டது.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி குதிரமலைக்கு மேற்கு ஆழ் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட மஞ்சள் பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படை காவலில் வைக்கப்பட்டதுடன் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட இந்திய படகு மற்றும் 03 இந்திய நாட்டினர் தற்போதைய தொற்று நிலைமை காரணமாக, இலங்கை கடலில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர், கல்பிட்டி மற்றும் மன்னார் பகுதிகளில் கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 முதல் 37 வயது வரையிலான கல்பிட்டி மற்றும் தால்பாடு பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கடற்படையால் கைது செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க மற்றும் யாழ்ப்பாணம் சுங்க அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.