‘புரெவி’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வட மத்திய பொது மக்களுக்கு கடற்படையின் உதவி

2020 டிசம்பர் 02 ஆம் திகதி வடகிழக்கில் நாட்டிற்குள் நுழைந்த புரெவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை உதவியது

புரேவி சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் புங்குடுதீவில் ஏற்பட்ட திடீர் வெள்ள நிலைமைகளை கட்டுப்படுத்த 2020 டிசம்பர் 03 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை பேரழிவு நிவாரண குழு நடவடிக்கை எடுத்ததுடன் 50 குடும்பங்களை தீவில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் மற்றும் சமைத்த உணவு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.

மேலும், புயலின் விளைவாக இரணைதீவில் சிக்கித் தவித்த 86 மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிளிநொச்சி பிரதேச செயலகம் மற்றும் கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கிய உதவிகளை வட மத்திய கடற்படை கட்டளையகம் இன்று 2020 டிசம்பர் 04 வழங்கியது. இதேவேளை, அனுராதபுரத்தில் நான்கு கடற்படை நிவாரணக் குழுக்களும், மன்னார் வங்காளையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புஸ்ஸதேவவின் நான்கு நிவாரணக் குழுக்களும், பூனேவ வில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் பண்டுகாபயவின் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து இலங்கை கடற்படை பல்வேறுநல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது