சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட 1385 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 23 கிராமுக்கு மேற்பட்ட ஹெராயின் ஆகியவற்றுடன் 18 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை கடந்த வாரம் வட மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட 1385 கிலோ கிராம் மற்றும் 500 கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 08 சந்தேக நபர்களும் 23 கிராம் மற்றும் 02 மிலி கிராம் ஹெராயினுடன் 10 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டன.

2020 நவம்பர் 29 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் இருக்கலம்பிட்டி கடல் பகுதியில் நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகள் சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு 14 சாக்குகளில் இருந்த 753 கிலோ மற்றும் 500 கிராம் ஈரமான மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் படகுகளில் இருந்த ஐந்து (05) சந்தேக நபர்களுடன் படகுகளை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், நவம்பர் 30 ம் திகதி மன்னார் உசிமுக்காந்துரை கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன், 632 கிலோகிராம் எடையுள்ள 17 உலர்ந்த மஞ்சள் மூட்டைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், நவம்பர் 30 ம் திகதி மன்னார் காவல்துறையுடன் இணைந்து வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 08 கிராம் மற்றும் 920 மில்லிகிராம் ஹெராயின் விற்க முயன்ற ஒரு சந்தேக நபரும் நவம்பர் 26 ஆம் திகதி 02 கிராம் 580 மில்லிகிராம் ஹெராயினுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 2020 நவம்பர் 25 ஆம் திகதி சர்தாபுர பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் முத்தூர் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 06 கிராம் மற்றும் 170 மில்லிகிராம் ஹெராயின் வைத்திருந்த ஐந்து சந்தேக நபர்கள் (05) மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் கைது செய்யப்பட்டது. மேலும், 2020 நவம்பர் 22, அன்று யாழ்ப்பாணம் பொலிஸாருடன் இணைந்து வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 05 கிராம் மற்றும் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பேசாலை, கல்பிட்டி, எருக்கலம்பிட்டி, பல்லேமுனை, முத்தூர், நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளில் வசிக்கும் 20 முதல் 47 வயது வரையிலானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட மஞ்சள், ஹெராயின், படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண சுங்க அலுவலகம், மன்னார் பொலிஸ், முத்தூர் பொலிஸ் மற்றும் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.