கடல் வழியாக கொண்டு வர முயன்ற மேலும் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது

கடற்படையினர் இன்று (2020 நவம்பர் 12) கல்பிட்டி தலுவ கடற்கரையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கல்பிட்டி தலுவ கடற்கரையை வந்தடைந்த இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 32 சாக்குகளில் நிரப்பப்பட்டிருந்த 800 கிலோகிராம் எடையுள்ள உலர் மஞ்சள் கண்டுபிடித்தனர். அதன்படி, குறித்த படகுகளில் இருந்த நான்கு சந்தேக நபர்கள் (04) மற்றும் டிங்கி படகுகள், மேலும், இந்த மோசடிக்கு தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் (02) மற்றும் ஒரு வண்டி ஆகியவையும் கடற்படையால் கைது செய்யப்பட்டன.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 முதல் 43 வயது வரையிலான கல்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள், டிங்கி படகுகள் மற்றும் வண்டியை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.