சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 நபர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைது

கடற்படை கடந்த வாரத்தில் கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்களையும் அவர்களது மீன்பிடிபொருட்களும் கைது செய்தது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் திருகோணமலை, புல்மூட்டை, நோர்வே தீவுக்கு வெளியே உள்ள கடல் பகுதியில், சல்பேயாரு கடல் பகுதியில் மற்றும் மட்டக்களப்பு வாவி பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 32 நபர்கள், 06 படகுகள், 500 கிலொ கிராமுக்கு மேற்பட்ட மீன் மற்றும் மீன்பிடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சுண்டிகுளம் வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 06 நபர்கள் மற்றும் 02 படகுகள் கைது செய்தனர். மேலும் குறித்த நபர்களினால் பிடிக்கப்பட்ட 54 கடல் அட்டைகள் மற்றும் உபகரணங்களும் கடற்படையால் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையில், வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் வங்காலைபாடு பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 11 கடல் அட்டைகளுடன் 02 சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டது. மன்னார் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து இருக்குளம்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 70 மிமீ சுற்றளவுக்கு குறைவான 247 சங்குகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 625 கிலோ கிராம் உலர் கடல் அட்டைகளுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 100 மீட்டர் நீளமுள்ள 04 வலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் திரியாய, தோப்பூர், கின்னியா முத்தூர், திருகோணமலை, எராக்கண்டி, நிலாவேலி, மன்னார், வன்காலை, பேசாலை மற்றும் தலவில ஆகிய பகுதிகளில் வசிக்கும் 18 முதல் 46 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி பொருட்களுடன் திருகோணமலை, மன்னார் மற்றும் மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநர்களடம் மற்றும் புல்மூட்டை, திருகோணமலை, மன்னார் மற்றும் பருத்தித்துறை மீன்வள ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.